பின்பக்கத்தில் ஆண்டு இல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
2005-க்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வரும் மார்ச் 31-க்கு பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அதனை
2005-க்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வரும் மார்ச் 31-க்கு பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பின்பக்கத்தில் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி, புதிய நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.