தற்போதைய செய்திகள்

கேரளத்துக்கு சுமை ஆட்டோவில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் சுகிபிரேமலா, வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஓட்டுநர் ஜான்பிரைட் உள்ளிட்டோர் புதன்கிழமை காலையில் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில்

சி. சுரேஷ்குமார்

குழித்துறை அருகே கேரளத்துக்கு சுமை ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் சுகிபிரேமலா, வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஓட்டுநர் ஜான்பிரைட் உள்ளிட்டோர் புதன்கிழமை காலையில் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த சுமை ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினர். ஆட்டோ நிற்காமல் சென்றதையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனர். குழித்துறை சந்திப்பு கடந்து கல்லுக்கட்டி பகுதியில் சென்றபோது சுமை ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடினார்.

தொடர்ந்து சுமை ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் கழிவு பேப்பர் மூட்டையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT