வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்!
மின் நுகர்வோர்கள் காலவிரயம், அலைச்சல் ஆகியவைகளை குறைத்து சுலபமான முறையில் மின் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கீழ்கண் முறைகளை
வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், ஏடிஎம் மையம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
மின் நுகர்வோர்கள் காலவிரயம், அலைச்சல் ஆகியவைகளை குறைத்து சுலபமான முறையில் மின் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கீழ்கண் முறைகளை அறிவித்துள்ளது. இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம், எந்த நேரமும் பணம் பெறும் ஏடிஎம் மையம் மூலம் செலுத்தலாம், அஞ்சல் அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
கூடுதல் கட்டணம் இல்லாமல் (பாரத மாநில வங்கிகள் தவிர) மின்கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், வங்கிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கிகள் பெயர் விபரம்: ஆக்ஸிஸ்வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன்வங்கி, சிட்டியூனியன்வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, கனராவங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாய் நேஷனல் வங்கி, ஸ்டேர் பாங்க் ஆஃப் இந்தியா, லெட்சுமி விலாஸ் வங்கி. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, தமிழ்நாடு மாநில கோ-ஆப்பரேட்டவ் வங்கி, ஃபெடரல்வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் அஞ்சலகம்.