முகப்பு
தற்போதைய செய்திகள்

விபத்து: திரையரங்கு காவலாளி சாவு

பாளையங்கோட்டை தெற்கு பஜாரைச் சேர்ந்தவர் முத்தையா (75). இவர், திருநெல்வேலி நகரத்தில் உள்ள திரையரங்கில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை இரவு பணி முடிந்ததும், தனது

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் திரையரங்கு காவலாளி இறந்தார்.

பாளையங்கோட்டை தெற்கு பஜாரைச் சேர்ந்தவர் முத்தையா (75). இவர், திருநெல்வேலி நகரத்தில் உள்ள திரையரங்கில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை இரவு பணி முடிந்ததும், தனது உறவினர்கள் சிலருடன் எஸ்.என்.சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →