ஜார்கண்ட்: ஐந்து அதிகரிகளை கடத்திய மாவோயிஸ்ட்டுகள்
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள கிரிதி மாவட்டத்தில் நவ்கானியா கிராமம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த அரசு அதிகாரிகள் 5 பேரை துப்பாக்கி
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள கிரிதி மாவட்டத்தில் நவ்கானியா கிராமம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த அரசு அதிகாரிகள் 5 பேரை துப்பாக்கி முனையில் மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர்.
பின்னர் சில மணி நேரங்கள் கழித்து, அந்த காரின் ஓட்டுனரை மட்டும் அவர்கள் விடுவித்தனர். கடத்தப்பட்ட அதிகாரிகளில் 3 பேர் பிரதமரின் கிராமப்புற மேப்பாட்டு திட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் என்றும். இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்துவருவதாகவும் கிரிதி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்