தேர்தல் செலவு குறித்து பாஜக வழக்கு: கெஜ்ரிவால், பாரதிக்கு நோட்டீஸ்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தில்லி சட்டசபை தேர்தலில் நிர்ணயிக்கப்பட அளவை விட கூடுதலாக
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தில்லி சட்டசபை தேர்தலில் நிர்ணயிக்கப்பட அளவை விட கூடுதலாக செலவு செய்ததாக தில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மற்றும் சோம்நாத் பாரதிக்கு எதிராக பாஜக வழக்கு தொடர்ந்தது.
பாஜக சார்பில் விஜயேந்திர குப்தா மந்றும் அரித் மெகரா தாக்கல் செய்த புகார் மனுவில், தேர்தலில் நிர்ணயிக்கப்பட்ட ரூ14 லட்சத்திற்கு மேல் இருவரும் செலவு செய்ததாகவும், எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று குறிபிப்பிட்டிருந்தனர்..
இது குறித்து விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி வரும பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.