முகப்பு
தற்போதைய செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்தது இந்தியா

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று  நடைபெற்றது. டாஸ் வென்ற

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று  நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பி்ற்கு 278 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 79 ரன்களும், தோனி 79 ரன்களும், ஜடேஜா62 ரன்களும் குவித்தனர்

279 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணி, 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து, 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.