நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல்
மேல்நிலைப் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதுபோல், சட்டக்கல்லூரி மாணவர், மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலியில்
திருநெல்வேலியில் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீரென புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்நிலைப் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதுபோல், சட்டக்கல்லூரி மாணவர், மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீரென புதன்கிழமை வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்தனர். பின்னர் திருநெல்வேலி திருச்செந்தூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் சுந்தரமணிகண்டன், மீரான், சரவணன், தில்லைசிதம்பரம், ராஜா உள்பட 100 க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.