தை அமாவாசை: ஸ்ரீநடராஜர் கோயிலில் திரண்ட மக்கள்
தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்த குளத்தில் மக்கள் திரண்டனர். ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் தீர்த்தத் தலங்களில் புனித நீராடும் மக்கள், தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்த குளத்தில் மக்கள் திரண்டனர். ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் தீர்த்தத் தலங்களில் புனித நீராடும் மக்கள், தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டு தை அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள கங்கைக்கு ஈடான சிவகங்கை தீர்த்தகுளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திரளாண மக்கள் கூடினர். பின்னர் குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.