அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலத்தரகர்கள் இருவர் சாவு
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வாணியம்பாடி - ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. மோட்டார்
ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் நிலத்தரகர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வாணியம்பாடி - ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்களும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.ஆம்பூர் தாலுகா போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது மோட்டார் சைக்கிள் நொறுங்கி கிடந்துள்ளது. அருகாமையில் இரு நபர்கள் படுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இறந்தவர்கள் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமம் காந்தி நகரை சேர்ந்த அப்துல் மாலிக் (49), மேல்காலனியை சேர்ந்த சக்திவேல் (35) என்பதும், அவர்கள் இருவரும் நிலத்தரகர்கள் என்பது தெரியவந்தது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
Advertisement