முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. பள்ளியில் 5 விலையில்லா மடிக்கணினி திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த விலையில்லா மடிக்கணினியில் 5 திருடு போய்விட்டதாய் புதன்கிழமை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் புகார் செய்துள்ளார்.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. பள்ளியில் 5 விலையில்லா மடிக்கணினி திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த விலையில்லா மடிக்கணினியில் 5 திருடு போய்விட்டதாய் புதன்கிழமை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் புகார் செய்துள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த விலையில்லா மடிக்கணினியில் 5 திருடு போய்விட்டதாய் புதன்கிழமை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியுள்ளது. இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 145 பேருக்கு கொடுப்பதற்காக அரசின் விலையில்லா மடிக்கணினி 28.6.14-ம் தேதி வந்துள்ளது. இதனை தலைமை ஆசிரியர் த.கோவிந்தராஜ், இதனைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடத்தில் வைத்து பூட்டியிருந்துள்ளார்.

புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற போது, அறிவியல் ஆய்வுக்கூடத்தின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர்களுக்கு வழங்க வந்திருந்த மடிக்கணினியில் 5 மட்டும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Click here to Reply or Forward
முழு கட்டுரையைப் படிக்க →