முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தைச் சேர்ந்தவருக்கு, அரிமா பன்னாட்டு தலைவர் விருது

சிதம்பரத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்ட அரிமா சங்க கண்தான பிரிவுத் தலைவர் பெரி.முருகப்பனுக்கு அதிகளவு கண்தானம் பெற்றமைக்காக அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் அரிமா சங்கங்களின் உயரிய

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:57 AM
பகிர்:

சிதம்பரத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்ட அரிமா கண் தானப்பிரிவுத் தலைவர் பெரி.முருகப்பனுக்கு, பன்னாட்டு தவைவர் விருது கிடைத்துள்ளது.

சிதம்பரத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்ட அரிமா சங்க கண்தான பிரிவுத் தலைவர் பெரி.முருகப்பனுக்கு அதிகளவு கண்தானம் பெற்றமைக்காக அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் அரிமா சங்கங்களின் உயரிய விருதான பன்னாட்டு தலைவர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டின் இரண்டாம் தலைவர் நரேஷ்அகர்வல் இந்த விருதினை வழங்கி கவுரவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் போது அரிமா மாவட்ட கவர்னர் விஜயலட்சுமி, முதலாம் துணை கவர்னர் முரளி, இரண்டாம் துணை கவர்னர் மாதவராஜ், மாவட்டத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.