முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது

சிதம்பரம் அருகே பி.முட்லூர் பகுதி வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் செந்தில்வேல். இவர் திங்கள்கிழமை சி.முட்லூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:57 AM
பகிர்:

சிதம்பரம் அருகே வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டில் விடுத்த இருவரை பரங்கிப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே பி.முட்லூர் பகுதி வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் செந்தில்வேல். இவர் திங்கள்கிழமை சி.முட்லூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பி.முட்லூர் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் (35), சி.முட்லூரைச் சேர்ந்த முத்து (41) ஆகிய இருவரும் வீட்டு மனை சம்பந்தமாக வருவாய் ஆய்வாளரிடம் தகராறு செய்து, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டில் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் செந்தில்வேல் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.