கார் மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற பெண் சாவு
சிதம்பரம் அருகே உள்ள சின்னாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த நாகப்பன் மனைவி தனம் (50). இவர் நூறு நாள் வேலை திட்டப்பணிக்கு செல்வதற்காக சிலம்பிமங்கலம் அருகே கடலூர் மெயின்ரோட்டில் நடந்து சென்று
சிதம்பரம் அருகே கார் மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள சின்னாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த நாகப்பன் மனைவி தனம் (50). இவர் நூறு நாள் வேலை திட்டப்பணிக்கு செல்வதற்காக சிலம்பிமங்கலம் அருகே கடலூர் மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இச்சம்பவத்தில் தனம் படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.