முகப்பு
தற்போதைய செய்திகள்

விருது நகர் அருகே சாலை விபத்து: 2 பேர் பலி

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் ஆயுதப்படை தடுப்புச்சுவரில் ஒரு லோடு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:00 AM

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் ஆயுதப்படை குடியிருப்பு அருகே தடுப்புச்சுவரில் ஒரு லோடு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.

பல்லடத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இந்த லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது எனவும் விபத்தில் வேணுகோபால், சுதர்ஷன், ஆகியோர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சூளக்கரை போலீஸார் வழக்குபதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.