விருது நகர் அருகே சாலை விபத்து: 2 பேர் பலி
விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் ஆயுதப்படை தடுப்புச்சுவரில் ஒரு லோடு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:00 AM
விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் ஆயுதப்படை குடியிருப்பு அருகே தடுப்புச்சுவரில் ஒரு லோடு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.
பல்லடத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இந்த லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது எனவும் விபத்தில் வேணுகோபால், சுதர்ஷன், ஆகியோர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சூளக்கரை போலீஸார் வழக்குபதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.