தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தாமதமின்றி டிஜிட்டல் உரிமம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் தாமதமின்றி விரைவாக வழங்க வேண்டும் என்று தகவல்&ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு
தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் தாமதமின்றி விரைவாக வழங்க வேண்டும் என்று தகவல்&ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் டிஜிட்டல் உரிமம் பெற அரசு கேபிளுக்கு சட்டப்படி முழு தகுதி உள்ளது என்றும், டிஜிட்டல் உரிமம் தரப்பட்டால்தான் ஏழை, நடுத்தர மக்கள் தரமான கேபிள் சேவை பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 2012 ஆம ஆண்டே டிஜிட்டல் உரிமம்கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது,
ஆனால் அதற்கு பின்பு விண்ணப்பித்த விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர, கடித்தத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த முறை ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தமிழக அரசு கேபிள் நிறுவத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.