காட்டுமன்னார்கோயில் அனந்தீஸ்வரர் கோயில் தேரோட்டம்
காட்டுமன்னார்கோயிலில் அனந்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
காட்டுமன்னார்கோயிலில் அனந்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
காட்டுமன்னார்கோயில் உள்ள ஸ்ரீஅனந்தீஸ்வரர் கோயில் வைகாசி விசாக பெருவிழா கடந்த ஜூன் 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. தேரில் ஸ்ரீநடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி, ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர் ஆகிய ஐவரும் 5 தனி, தனி தேர்கலில் வீதி உலா வந்தனர். திரளானோர் மக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.