முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே சிக்கிய வெளிநாட்டு ஆந்தை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரிய வகை வெளிநாட்டு ஆந்தை ஒன்று சிக்கியது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரிய வகை வெளிநாட்டு ஆந்தை ஒன்று சிக்கியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே எறும்பூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை வழிதவறி வந்த அரிய வகை ஆந்தை ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்து வைத்தனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோ சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று அரிய வகை ஆந்தை பெற்று வந்து, பத்திரமாக பிச்சாவரம் காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.