வேலைக்குச் செல்லச் சொன்னதால் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவரை வேலைக்குச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறிய மனைவியை, அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்வேலைக்குச் செல்லச் சொன்னதால் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவரை வேலைக்குச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறிய மனைவியை, அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவரை வேலைக்குச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறிய மனைவியை, அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்
.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் பெ.மாரியப்பன் (49). இவரது மனைவி பசுபதி (38). மாரியப்பன் வேலைக்குச் செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு ஊதாரித்ததனமாக சுற்றித் திரிந்துள்ளார். இதனைக் கண்ட மனைவி, வேலைக்குச் செல்லச் சொல்லி புத்திமதி கூறியுள்ளார். இதில் ஆத்திரமுற்ற மாரியப்பன், மனைவியை ஆபாசமாகப் பேசி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவர் காயமுற்றார்.வத்திராயிருப்பு போலீஸில் மனைவி பசுபதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாரியப்பனைக் கைது செய்தனர்.