பைக்கிலிருந்து விழுந்த அரசு பேருந்து நடத்துனர் சாவு
கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் மலைசாமி(37). அரசு பேருந்தில் நடத்துனராக வேலைப்பார்த்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் சரக்கம்பட்டி சாலையில்
பைக்கிலிருந்து விழுந்த அரசு பேருந்து நடத்துனர் வெள்ளிக்கிழமை இரவு பரிதாபமாக இறந்தார்.
கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் மலைசாமி(37). அரசு பேருந்தில் நடத்துனராக வேலைப்பார்த்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் சரக்கம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென பைக் நிலைதடுமாறியதில் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலே இறந்தார். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.