ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் கடத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணைக் கடத்திச் சென்றதாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணைக் கடத்திச் சென்றதாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மகாராஜபுரம், அங்காள அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மு.சுப்புராஜ் (45). இவரது மகள் ராக்கம்மாள் (22) என்பவருக்கு பல இடங்களில் இருந்து பெண் கேட்டு வந்துள்ளார்கள். நல்ல வரனுக்காக காத்திருந்துள்ளார்கள். இந்நிலையில் சுப்புராஜூம் அவரது மனைவியும் வியாழக்கிழமை காலை வேலைக்குச் சென்றுள்ளனர். மாலை வீடு வந்து பார்த்த போது மகள் ராக்கம்மாளைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடி விசாரித்தத்தில் இதே இடத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் முத்தையா என்பவர் ராக்கம்மாளை அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் சுப்புராஜ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராக்கம்மாளைத் தேடி வருகிறார்கள்.