முகப்பு
தற்போதைய செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி மீது சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு

சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி செவ்வாய்க்கிழமை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிதம்பரம் உதவிஆட்சியர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:45 AM
பகிர்:

தேர்தல் விதிமுறைகளை மீறியாத பாரதிய ஜனதா கட்சி மீது சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி செவ்வாய்க்கிழமை தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலர் சுற்றுச்சுவரில் பாரதிய ஜனதா கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து, தேர்தல் விதிமுறைகளை மீறி, அரசு அலுவலக சுவற்றில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக நகர காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.