முகப்பு
தற்போதைய செய்திகள்

மோடியை ஆண்மையற்றவர் என்று கூறிய குர்ஷித்: இப்போது நர்சரி பள்ளி மாணவர் என்கிறார்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆண்மையற்றவர் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று நர்சரி பள்ளி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:45 AM
பகிர்:

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆண்மையற்றவர் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று நர்சரி பள்ளி மாணவருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய குர்ஷித், குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் மோடிக்கு உச்ச நீதிமனறம் நற்சான்றிதழ் அளித்துள்ளதா என்பது குறித்து  தனக்கு தெரியாது என்றார். கீழ் நிதிமன்றம் அவருக்கு சம்மன் அளிக்க மறுத்துள்ளதை விமர்சித்த குர்ஷித், நர்சரி பள்ளியில்படிக்கும்போதே டாக்டர் பட்டம் பெற்றதாக மாணவர்கள் நினைப்பது போல கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைமுன்வைத்து தான் குற்றமற்றவன் என மோடி பிரசாரம் செய்கிறார் என்றார்.

சல்மான் குர்ஷித்தின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில் மோடியின் வளர்ச்சியை பார்த்து என்ன செய்வது என்று புரியாமல் உள்ளனர், அவர்கள் அவர்களாகவே தோல்வி அடைவர் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →