முகப்பு
தற்போதைய செய்திகள்

 கரூர் அருகே கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்ததில் கரும்பு வெட்டும் தொழிலாளிகள் 2 பேர் சாவு

கரூர் அருகே கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்ததில் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளிகள் 2 பேர் திங்கள்கிழமை அதிகாலை பரிதாபமாக இறந்தனர்.

Updated On : 31 மார்ச், 2014 at 1:13 PM
பகிர்:

கரூர் அருகே கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்ததில் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளிகள் 2 பேர் திங்கள்கிழமை அதிகாலை பரிதாபமாக இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வடமலையனூரைச் சேர்ந்தவர்கள் அய்யனார்(22), குமார்(17). இவர்கள் கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில் தங்கி அங்கு கரும்பு வெட்டும் தொழிóல் செய்துவந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 3மணியளவில் புகழூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்ல டிராக்டர் வந்துள்ளது. அந்த டிராக்டரை அய்யனாரும், குமாரும் எடுத்து பின்னால் நோக்கி நகர்த்தியுள்ளனர். அப்போது இருளில் கிணறு இருப்பது தெரியாமல் பின்னோக்கிச் சென்றதில் டிராக்டருடன் இருவரும் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலே கிணற்றுக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுதொடர்பாக வெள்ளியணை போலீஸர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.