முகப்பு
தற்போதைய செய்திகள்

பாளை.யில் வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர், சிறுவன் சாவு

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ் (44). மும்பையில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். ஊருக்கு வந்திருந்த இவர், தனது மனைவி சித்ரா,

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:11 AM
பகிர்:

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை காலையில் நிகழ்ந்த விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர், சிறுவன் இறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ் (44). மும்பையில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். ஊருக்கு வந்திருந்த இவர், தனது மனைவி சித்ரா, மகன் கிருஷ்ணன் ஆகியோருடன் தனது காரில் திருநெல்வேலி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டார். வழிதெரியாமல் பாளையங்கோட்டை மத்திய சிறை வரை சென்ற அவர், பின்னர் அங்கிருந்து திரும்பி தெற்கு புறவழிச்சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்ல முயன்றாராம்.

அப்போது அவ் வழியாக வந்த அரசு பேருந்தும், காரும் மோதியது. இதில் ஜெயகணேஷ், சித்ரா, கிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜெயகணேஷ் இறந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

சிறுவன் சாவு:

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் மகேஷ் (7). இவர்,  அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருடன் நான்குவழிச்சாலையில் ரெட்டியார்பட்டி நோக்கி செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மகேஷ் இறந்தார். இதுகுறித்தும் திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →