முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை மாவட்டத்தின் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 87.95 கடந்த ஆண்டை விட 3.24 சதவீதம் அதிகம் 

நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வருவாய் மாவட்டத்தில் 87.95 சதவீதம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:13 AM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வருவாய் மாவட்டத்தில் 87.95 சதவீதம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 3.24 சதவீதம் அதிகம். நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தில் 7,132 மாணவர்களும், 9,958 மாணவிகளும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில், 6,016 மாணவர்களும், 9,013 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை- 15,029. இதன் தேர்ச்சி சதவீதம் 87.95.  கல்வி மாவட்ட அளவில்... நாகை கல்வி மாவட்டத்தில் 53 பள்ளிகளைச் சேர்ந்த 3,020 மாணவர்களும், 4,132 மாணவிகளும் தேர்வு எழுதினர்.

இதில், 2,586 மாணவர்களும், 3,797 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி வீதம் 89.25.  மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 59 பள்ளிகளைச் சேர்ந்த 4,112 மாணவர்களும், 5,826 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில், 3,430 மாணவர்களும், 5,216 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 87. நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 83.41 சதவீதம் பேரும், மாணவிகள் 89.53 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். நாகை கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 85.63 சதவீதம் பேரும், மாணவிகள் 91.89 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வருவாய் மாவட்டம் கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 84.71 சதவீதம் தேர்ச்சிப் பெற்றிருந்தது. நிகழாண்டில் 87.95 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதன் மூலம் தேர்ச்சி வீதம் 3.24 சதவீதம் அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →