காட்டுமன்னார்கோயில் அருகே கிராமத்திற்குள் புகுந்த 5 அடி நீள முதலை
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கொண்டகருப்பூர் கிராமத்திற்குள் புதன்கிழமை காலை முதலை ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில்
காட்டுமன்னார்கோயில் அருகே கிராமத்திற்குள் புகுந்த 5 அடி நீள முதலையை சிதம்பரம் வனத்துறையினர் பிடித்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கொண்டகருப்பூர் கிராமத்திற்குள் புதன்கிழமை காலை முதலை ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் அக்கிராமத்திற்கு சென்று 100 கிலோ எடை கொண்ட 5 அடி நீள முதலையை பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.