மதுராந்தகம் அருகே ஆம்னி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர்கள் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ்ஸை டிரைவர் ஜோயல் ஓட்டிவந்தார். இந்த பஸ்சில் 25 பேர்கள் பயணிகள் இருந்தனர். அந்த பஸ் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரம் தேசிய
மதுராந்தகம் அடுத்த கள்ளபிரன்புரம் நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ்ஸை டிரைவர் ஜோயல் ஓட்டிவந்தார். இந்த பஸ்சில் 25 பேர்கள் பயணிகள் இருந்தனர். அந்த பஸ் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, அந்த சாலையை சரக்கு லாரி கடக்க முயன்றதில், எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது. இதில் சரக்கு லாரி சாலையோரம் கவிழ்ந்துவிட்டது. லாரியில் பயணம் செய்த சரக்கு லாரி டிரைவர் பொலம்பாக்கம் ராஜா (22), லாரி கிளினர் ஆலங்குளம் மாரிசாமி (26) ஆகியோரும், பஸ்சில் பயணம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகரைச் சேர்ந்த வைத்தீஸ்வரி (வயது36), ஆம்னி பஸ் டிரைவர் ஜோயல் (36), ) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் உடன்டியாக, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டனர்.
இது குறித்து மதுராந்தகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement