முகப்பு
தற்போதைய செய்திகள்

போகர் ஜெயந்தி.மரகதலிங்க பூஜை

பழநியில் போகர் ஜெயந்தியை முன்னிட்டு, மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:27 AM
பகிர்:

பழநியில் போகர் ஜெயந்தியை முன்னிட்டு, மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

பழநியில்  நவபாஷன மூலிகைகளால், ஞானதண்டாயுதபாணி சுவாமி சிலையை வடிவமைத்த சித்தர் போகர், வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். நேற்று போகர் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மலைக்கோயிலுள்ள போகர் சன்னதி, வாழைமரம், பூக்களால் அலங்கரிக்கபட்டிருந்தது. விலைமதிப்பில்லாத, அபூர்வ பச்சை மரகத லிங்கத்திற்கு, பழங்கள், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட, 16 வகையான சோடஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

பின் மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது. பாதவிநாயகர் கோயில் அருகேயுள்ள புலிப்பாணி ஆசிரமம், போகர் ஜீவசமாதி ஆலயத்தில், அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சிவானந்த புலிப்பாணி பாத்திரசுவாமிகள், சரவணா அறக்கட்டளை சண்முகானந்தம், மனோகரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.