தற்போதைய செய்திகள்

வீரபாண்டி ஆறுமுகத்தின் மணி மண்டபம் நாளை திறப்பு அன்பழகன் திறந்து வைக்கிறார்

சேலத்தில் நவம்பர் 23 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மணி மண்டபத்தை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் திறந்து வைக்கிறார்.

தினமணி

சேலத்தில் நவம்பர் 23 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மணி மண்டபத்தை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் திறந்து வைக்கிறார்.

இதுதொடர்பாக, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான வீரபாண்டி ராஜா வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்தின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் நவம்பர் 23 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

நவம்பர் 23 ஆம் தேதி காலை 8 மணியளவில், பூலாவரியில் உள்ள திமுக அலுவலக திடலில் இருந்து அவரது நினைவிடம் வரை மவுன ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு மண்டபத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் காலை 9 மணிக்கு, வி.எஸ்.ஏ. கல்லூரி மைதானத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த நிகழ்வுகளில் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT