திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
இதையொட்டி காலை 6.05 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6.05 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.