சிஐடியூ நிர்வாகி கொலை: உடலை வாங்க மறுத்து 3 மணி நேரம் மறியல் 109 பேர் கைது: நெல்லையில் பரபரப்பு
திருநெல்வேலி அருகே சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட இணைச் செயலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் குடும்பத்தினருடன்
திருநெல்வேலி அருகே சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட இணைச் செயலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் குடும்பத்தினருடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று 3 மணிநேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 19 பெண்கள் உள்பட 109 பேரை போலீஸார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியாப்பட்டியை அடுத்த திருமால் நகரைச் சேர்ந்தவர் கோபி (38). சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்கமாவட்ட இணைச் செயலராக பதவி வகித்தவர். இவரை, வெள்ளிக்கிழமை இரவுஆட்டோவில் அழைத்துச் சென்ற மர்மநபர்கள், அபிஷேகப்பட்டி அருகே வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இதையடுத்து இவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால், சடலத்தை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர், சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர், மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.