ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி நெல்லை கோயிலில் சிறப்பு பூஜை
திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் அமைச்சர்கள் பூ. செந்தூர்பாண்டியன், ஆர்.பி. உதயக்குமார், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர்
அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டி ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு சாலைக்குமாரசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் அமைச்சர்கள் பூ. செந்தூர்பாண்டியன், ஆர்.பி. உதயக்குமார், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன், ஜெயலலிதா பேரவைச் செயலர் சுதாபரமசிவன், முத்துசெல்வி எம்.எல்.ஏ, மாநில கூட்டுறவு இணையப் பெருந்தலைவர் எம். சக்திவேல்முருகன், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணிசங்கரலிங்கம், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் ந. மோகன், புறநகர் மாவட்ட துணைச் செயலர் செவல் எஸ். முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.