முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆலங்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநர் சாவு

ஆலங்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை இரவு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

ஆலங்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை இரவு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

 ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சேர்ந்கவர் நடராஜன் மகன் சதாசிவம் (28).ஓட்டுநனரான இவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புளிச்சங்காடு கைகாட்டியில் இருந்து ஆலங்குடி நோக்கி லாரியில் சென்றுள்ளார். அப்போது லாரியில் டீசல் இல்லாமல் வடகாடு அருகே நின்றுவிட்டதாம்.

இதையடுத்து சதாசிவம் ஆலங்குடி சென்று டீசல் வாங்கிக்கொண்டு மெக்கானிக்கான நெம்மகோட்டையைச் சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ் (26) என்பவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வடகாடு நோக்கி புறப்பட்டுள்ளார்.அப்போது கீழாத்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

 இதில் பலத்த காயமடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சுரேஷை அக்கம்பக்கதிதனர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 தகவல் அறிந்து அங்கு வந்த வடகாடு போலீஸார் சதாசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடகாடு போலீஸார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →