சிதம்பரம் விநாயகர் கோயிலில் 1008 தேங்காய் உடைத்து பிரார்த்தனை!
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோயிலில் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோயிலில் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் 1008 தேங்காய் உடைத்தும், சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தும் பிராத்தனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் நகரச் செயலாளர் கே.கலியபெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பாச.மில்லர், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், நகர இளைஞரணி செயலாளர் ராஜா, நகரமன்ற உறுப்பினர் நடனசபாபதி தீட்சிதர், சிவராமதீட்சிதர், எம்.ஜி.பாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.