கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியின் அருகே மூடப்படாத கிணறு ஒன்றில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்
தற்போதைய செய்திகள்கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியின் அருகே மூடப்படாத கிணறு ஒன்றில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியை பரபரப்புக்குள் ஆக்கியது.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியின் அருகே மூடப்படாத கிணறு ஒன்றில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில் அந்த நபர் யாரென்று அறியமுடியவில்லை. 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் நீல நிற லுங்கியும், வெள்ளை கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தார். 45 வயதில் யாராவது காணாமல் போய் இருந்தாலோ, அல்லது இவர் குறித்த விவரங்கள் தெரிந்தாலோ ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு 044-27948235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.