வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற அக்.26 மற்றும் நவ.2 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற அக்.26 மற்றும் நவ.2 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்.15ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் வாக்காளர் சேர்க்கைக்கான படிவங்கள் அக்.15 முதல் நவ.10ம் தேதி வரையில் பெறப்பட இருக்கிறது. எனவே சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல்கள் அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அங்கிகாரம் பெறாத கட்சிகள் ரூ.100 செலுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வாக்காளர் பட்டியல் அடங்கிய குறுந்தகடுகளை பெற்றுக் கொள்ளலாம்.
விருதுநகர் பகுதியில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முகாம், சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில், இதுவரையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் மாற்றம் உ்ள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்காக வாக்குச் சாவடி அலுவலர்களிடம் பொதுமக்கள் படிவங்களை ஆர்வத்துடன் அளித்தனர். அதோடு, அரசியல் கட்சியினரும் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்களை பெயர் சேர்ப்பதற்கான படிவங்களையும் அளித்தனர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட நாள்களில் 855 வாக்குச் சாவடி மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், தொகுதிக்குள் இடமாற்றம், முகவரி மாற்றம் பொதுமக்கள் யாவரும் மனு அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த முகாம் வருகிற 31-ம் தேதி வரையில் சுருக்க திருத்த முகாம் நடைபெற இருப்பதாக தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன் தெரிவித்தார்.