விருதுநகர் அருகே மாணவர்களை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் அருகே கண்மாய் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களை தாக்கியது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே கண்மாய் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களை தாக்கியது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே ஆமத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில் வினோத்குமார், அருண்குமார் மற்றும் பாண்டீஸ்வரகுமார் ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்கள் வெள்ளூர் ஊரணிக்கரை கண்மாய் அருகே வியாழக்கிழமை மாலையில் சைக்கிள்களை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது, அங்கு வந்த பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த 3 பேரும் மிதிவண்டிகளை கீழே தள்ளினார்களாம்.
இது குறித்து மாணவர்கள் கேட்டதற்கு 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்களாம். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
Advertisement
இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.