லாரியில் அடிபட்டு ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்தவர் அ.மாரியப்பன். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை தொலைபேசி அதிகாரியாக பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்றார்.
தற்போதைய செய்திகள்லாரியில் அடிபட்டு ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்தவர் அ.மாரியப்பன். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை தொலைபேசி அதிகாரியாக பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரியில் அடிபட்டு ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்தவர் அ.மாரியப்பன். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை தொலைபேசி அதிகாரியாக பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்றார். ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் மாரியப்பன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மாரியப்பன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர், சோழாபுரம், ம.இசக்கிமுத்து என்பவரைக் கைது செய்தனர்.