சிறுமிகள் பாலியல் வழக்கு: சிபிஐக்கு மாற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மாநில அமைப்புச் செயலர் சு.பாவாணன் வெளியிட்ட அறிக்கை:
அப்பாவி பள்ளி மாணவிகளை திட்டமிட்டு பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை காவல்துறையினர் தப்பி வைக்க திட்டமிட்டனர். ஆனால் வேறு வழி இல்லாமையால் காலம் தாழ்த்தி கைது செய்தனர்.
மேலும் அனைத்துக்கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தால் அப்பாவிகள் சிலரை கைது செய்துள்ளனர். இச்சமூக விரோத செயலில் ஈடுபட்டோருக்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலீஸôர் என பட்டியல் நீளுகிறது.
அவர்களை தப்பிக்க விடுவதின் மர்மம் என்ன. இதன் பின்னணியில் ஆளும் கட்சியினரும் உள்ளதாகத் தெரிகிறது.
இதே போல் அபிஷேகப்பாக்கத்தில் 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வெறும் காவலர்கள் மட்டுமே தண்டித்தனர். உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
காவல்துறையிலேயே அரசியல் செல்வாக்கு உள்ளோர் தப்பித்து விடுகின்றனர்.புதுவை காவல்துறை இவ்வழக்கை நடத்தினால் நியாம் கிடைக்காது. எனவே சிபிஐ-க்கு வழக்கு விசாரணை மாற்ற வேண்டும்.
இதை செய்ய அரசு தவறினால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் பாவாணன்.