முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்ற வெள்ளி விழா

அறிவுத் திருக்கோவிலில் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாளின் 100-வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்ற வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்ற வெள்ளி விழா

அறிவுத் திருக்கோவிலில் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாளின் 100-வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்ற வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

அறிவுத் திருக்கோவிலில் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஜெயந்தி விழா, அன்னை லோகாம்பாளின் 100-வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்ற வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் எஸ்.சர்வஜித் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப.வெள்ளை, மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.சஞ்சீவிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

பொறுப்பாசிரியர் எஸ்.ராஜேந்திரன் தவம் நடத்தினார். திட்ட அலுவலர் மா.ராமர் வரவேற்றார். செயலாளர் பி.அய்யாச்சாமி ஆண்டறிக்கை வாசித்தார்.

போத்தீஸ் தொழில் குழுமத்தின் தலைவர் கே.வி.பி.சடையாண்டி-எஸ்.வேலம்மாள், சட்டப் பேரவை உறுப்பினர் வி.பொன்னுப்பாண்டி-பி.சமுத்திரம், தலைமை ஆசிரியர் என்.முருகன்-எம்.லட்சுமி ஆகியோர் மனைவி நல வேட்பு விழவில் சிறப்பு தம்பதியினராக கலந்து கொண்டனர். திருநெல்வேலியைச் சேர்ந்த மூத்த பேராசிரியர் ஜி.டி.கணேசன் மனைவி நல வேட்பு உரையாற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவர்கள் தங்களது மனைவிகளுக்கு ரோஜா மலரை அளித்து, இந்த இனிய நாள் முதல் மலர் போன்ற உன் இனிய மனம் வாடாமல் நடப்பேன் என்று உறுதியளித்தனர்.
மேலும் மனைவிகள் தங்களது கணவருக்கு ஆப்பிள் கனி கொடுத்து, இந்த இனிய நாள் முதல் கனி போன்ற உங்கள் மனதை அறிந்து கனிவாக நடந்து கொள்வேன் என்று உறுதியளித்தனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →