ஒகேனக்கல்லில் நீர் வரத்து தொடர் சரிவு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர் வரத்து மூன்றாவது நாளாக தொடர்ந்து சரியத் தொடங்கியுள்ளது.ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 14 ஆயிரம் கன தண்ணீர் வந்துக்
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர் வரத்து மூன்றாவது நாளாக தொடர்ந்து சரியத் தொடங்கியுள்ளது.ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 14 ஆயிரம் கன தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது.இந்த நிலையில், திங்கள்கிழமை அருவிக்கு நீர்வரத்து மேலும் குறைந்து நொடிக்கு 7 ஆயிரம் கன அடியாக வந்தது. நீர் வரத்து வெகுவாக குறைந்ததால், ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.