சிதம்பரத்தில் 5 கடைகள் எரிந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்
சிதம்பரம் தேரடிகடைத்தெருவில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பழைய துணிமணிகள் கடை உள்ளது. இந்த கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீ பிடித்து பரவியது. தீ பரவி அருகில் இருந்த
சிதம்பரம் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமுற்றன.
சிதம்பரம் தேரடிகடைத்தெருவில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பழைய துணிமணிகள் கடை உள்ளது. இந்த கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீ பிடித்து பரவியது. தீ பரவி அருகில் இருந்த மாடசாமி பழைய இரும்புக்கடை, இந்திராணி தையல் கடை, அஸ்கர்அலி எலக்ட்ரிக் கடை, மணிகண்டன் மர இழைப்பகம் ஆகிய கடைகள் தீயில் எரிந்து சேதமுற்றனர். தகவல் அறிந்த நிலைய அலுவலக் ஜகாங்கீர்முகமது தலைமையிலான சிதம்பரம் தீயணைப்பு மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இத்தீவிபத்தில் மேற்கண்ட கடைகளில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமுற்றன.
கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆறுதல்: சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை காலை தீ விபத்து நடைபெற்ற கடைகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர் சிதம்பரம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகரிகளை தொடர்பு கொண்டு தீவிபத்து குறித்து உரிய நிவாரண நடவடிக்கைகளை வழங்குமாறு வலியுறுத்தினார். எம்எல்ஏவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், நடைபாதை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் வஜ்ரவேல் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
அதிமுகவினர் உதவி: தீவிபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு, கடை உரிமையாளர்களுக்கு நிவாரணத் தொகையினை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். அவர்களுடன் நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.