முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெ.மீதான தீர்ப்பு: கர்நாடக அரசின் பழிவாங்கும் போக்கு என பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம்

காவிரி நீர் பிரச்னைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஜெ.மீதான தீர்ப்பில் கர்நாடக அரசு பழிவாங்கும் வகையில் செயல்பட்டுள்ளது என பகுஜன் சமாஜ்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:54 AM
பகிர்:

காவிரி நீர் பிரச்னைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஜெ.மீதான தீர்ப்பில் கர்நாடக அரசு பழிவாங்கும் வகையில் செயல்பட்டுள்ளது என பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுவை மாநில துணைத் தலைவர் எம்.பாவாடை ராஜா திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக மக்கள் நலன் கருதி காவிரி நீர் பிரச்னையில் நியாயம் பெற ஜெயலலிதா போராடி வந்தார். தமிழக மக்களின் பணம் ரூ.100 கோடியை அபகரிக்கும் நோக்கில் கர்நாடக அரசு ஊழல் வழக்கில் பழிவாங்கும் போக்கில் செயல்பட்டுள்ளது. நீதிபதி பாரபட்சமாக செயல்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒற்றுமை இல்லாமல் அரசியல் கட்சிகள் இப்பிரச்னையில் அரசியல் செய்வதை பகுஜன் சமாஜ் கட்சி கண்டிக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு ரூ.66 கோடி தான். ஆனால் இதற்குண்டான குறிப்பிட்ட அபராதத்தை வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.100 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதில் கர்நாடக அரசு சதிச்செயல் புரிந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது என்றார் பாவாடைராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.