முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் மேற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட மேலும் 2 பேர் வேட்புமனு தாக்கல்

கடலூர் மேற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட வியாழக்கிழமை மேலும் இருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

கடலூர் மேற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட வியாழக்கிழமை மேலும் இருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் சிதம்பரம் வாண்டையார் ஹோட்டலில் புதன்கிழமை தொடங்கியது. தேர்தலில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தற்போதைய மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி உள்ளிட்ட 10 பேர் தேர்தல் ஆணையாளர்களிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

2-ம் நாளான வியாழக்கிழமை முன்னாள் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, கே.என்.ஞானவேல் ஆகியோர் தேர்தல் ஆணையாளர் வி.எஸ்.விஜய்யிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆக மொத்தம் மாவட்டச் செயலாளர் பதவிக்கு 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் மாவட்ட அவைத்தலைவர் பதவிக்கு 8 பேரும், மாவட்ட துணைச் செயலாளர் பதவிக்கு 9 பேரும், மாவட்ட இணைச்செயலாளர் பதவிக்கு 4 பேரும், பொருளாளர் பதவிக்கு 3 பேரும், பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு 28 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வி.எஸ்.விஜய் எம்எல்ஏ தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.