சிதம்பரத்தில் மயங்கி விழுந்து கிடந்த அரியவகை பறவை மீட்பு
சிதம்பரம் பகுதியில் மயங்கி கீழே விழுந்து கிடந்த அரியவகை பறவையான பாம்புதாரா என்ற பறவையை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.
சிதம்பரம் பகுதியில் மயங்கி கீழே விழுந்து கிடந்த அரியவகை பறவையான பாம்புதாரா என்ற பறவையை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் அரிய வகை பறவை ஒன்று மயங்கிய நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு அவ்வழியே சென்ற வால்காரமேட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் அந்த இடத்திற்கு சென்று அலகில் நூல் சிக்கி மயங்கிய நிலையில் கிடந்த அரிய வகை பறவையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து இருநாட்கள் பராரமரித்து வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை பிச்சாவரம் காப்புக்காட்டில் கொண்டு பத்திரமாக விட்டனர். இந்த பறவையை டார்டர் அல்லது பாப்புதாரா (Dartar or Snack Bird) என்ற அழைக்கப்படும். இப்பறவை உணவிற்காகவும், இனவிருத்திக்காகவும் நீர்நிலைப்பகுதியை தேடி வரும். வழிதவறி இங்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.