சிதம்பரம் அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
சிதம்பரம் அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிதம்பரம் அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிதம்பரம் அருகே என்.பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(63). இவரது மகன் சங்கர் என்கிற கல்யாண்குமார் (44). இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 9-10-2013ல் தனது தந்தை சிவப்பிரகாசத்திடம் இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். வேலை வெட்டி இல்லாத உணக்கு இரண்டாவது திருமணம் வேண்டுமா என தந்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கல்யாண்குமார் உருட்டு கட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். இதில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கல்யாண்குமாரை கைது செய்து சிதம்பரம் 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணை முடிவுற்று நீதிபதி கிங்ஸ்லி கிருஸ்டோபர் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில் குற்றம் நிருப்பிக்கப்பட்டதால், குற்றம் சாட்டப்பட்ட கல்யாண்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.