முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் போலீஸாரை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 57 பேர் கைது

திருநெல்வேலியில் போலீஸாரை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்த 57 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

திருநெல்வேலியில் போலீசை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்த 57 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள், கல்லூரிகளில் பயின்று வரும் தலித் மாணவர்கள், சமூகப் பணியில் ஈடுபடும் இளைஞர்கள் மீது எந்த குற்ற பின்னணி இல்லாத நிலையில் அவர்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 200 க்கும் மேற்பட்டோர் மது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸாரின் இந்நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததை அடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள், அமைப்பின் மாநகர செயலர் வண்ணை முருகன் உள்ளிட்டோரை முன் கூட்டியே போலீஸார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ப. ராஜ்குமார் தலைமையில் வந்தனர். அவர்கள் போலீசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் பங்கேற்ற 57 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →