முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேலகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் த.சமுத்திரக்கனி (28). இவரது மனைவி ரெஜினா மேரி (28). சமுத்திரக்கனி வேறொரு பெண்ணுடன் தகாத தொடர்பு வைத்துக் கொண்டு, மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வாராம். ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறில் ஈடுபட்ட சமுத்திரக்கனி மனைவியை கம்பால் அடித்துள்ளார். காயமுற்ற அவர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதனைத் தட்டிக் கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரெஜினா மேரி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சமுத்திரக்கனியைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →