விஜயகாந்தை கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது முதலமைச்சரின் படத்தை தேமுதிகவினர் அகற்றியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர்
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது முதலமைச்சரின் படத்தை தேமுதிகவினர் அகற்றியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் விஜயகாந்த் தங்கி இருந்த ஹோட்டல் முன் அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் அதிமுக தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு கருதி 2 எம்.எல்.ஏ. உட்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.